×

முசிறியில் நின்ற லாரி மீது பைக் மோதி பிஇ பட்டதாரி பரிதாப பலி

முசிறி, செப்.20: முசிறியில் நின்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில் பைக்கை ஓட்டிச்சென்ற பிஇ பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.தொட்டியம் அடுத்த மகேந்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் தமிழ்வாணன் (29). பிஇ முடித்து திருச்சி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று தமிழ்வாணன் முசிறியிலிருந்து தனது பைக்கில் மகேந்திரமங்கலம் சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறி பைபாஸ்சாலையில் பெட்ரோங் பங்க் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் வேகமாக மோதியதில் தமிழ்வாணன் பலத்த காயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தமிழ்வாணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி போலீசார் தமிழ்வாணன் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிந்து லாரி டிரைவர் ஆமூரை சேர்ந்த சரவணகுமாரை (26) கைது செய்தனர்.


Tags : Pee graduate ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ