திருச்சியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை துவக்கம்

திருச்சி, செப்.20: திருச்சியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை சிவா எம்பி துவக்கி வைத்தார். பிஎஸ்என்எல் நிறுவனம் அதிவேக 4ஜி சேவையை திருச்சியில் நேற்று முதல் துவக்கியது. பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட பொது மேலாளர் ராஜூ முன்னிலையில் திருச்சி சிவா எம்.பி. 4 ஜி சேவையை துவக்கி வைத்தார். நேற்று முதல் 117 டவர்களில் இதன் சேவை கிடைக்கும். படிப்படியாக மற்ற டவர்களுக்கும் இதன் சேவை கிடைக்கும். தற்போது பயன்படுத்தி வரும் பிஎஸ்என்எல் சிம்கார்டுகளையே வாடிக்கையாளர்கள் 4ஜி சிம்கார்டுகளாக வாடிக்கையாளர் சேவை மையங்களில் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.

Related Stories: