×

லால்குடி அருகே மாடு திருடிய 5 பேர் கைது வேன் பறிமுதல்

லால்குடி,செப்.20: லால்குடி அருகே மாடு திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து வேனை பறிமுதல் செய்தனர்.திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த சவேரியார்கோவில் தெருவில் வசிக்கும் ஜெயராஜ் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் மர்ம நபர்கள் 5 பேர் ஒரு வேனில் மாட்டை வேனில் ஏற்றியுள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யார் நீங்கள், ஏன் மாட்டை வேனில் ஏற்றுகிறீர்கள் என கேட்டுள்ளனர். இதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே லால்குடி காவல் நிலைத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாட்டை ஏற்றிய வேனையும், 5 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு கொண்டு சென்றனர். விசாரணையில் தஞ்சை மாவட்டம் நேமம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் ஆனந்த் (33), கல்லணை அருகே உள்ள விளாங்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதாசிவம் மகன் ராஜேந்திரன் (56), சேகர் மகன் பழனி (31), செல்லமுத்து மகன் ரெங்கராஜ் (50), திருக்காட்டுப்பள்ளிகாலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அய்யப்பன் என்பதும், மாடு திருட வந்ததும் தெரியவந்தது.அதையடுத்து 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Lalgudi ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...