சென்னை: வெளிநாட்டில் மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக இன்ஸ்பெக்டரிடம் 1 லட்சம் மோசடி செய்த தனியார் ஏஜென்சியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஷாலினி (45). இவர், சென்னை சிபிசிஐடி தலைமை இடத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் மேரி. பிளஸ் 2 முடித்துள்ளார். நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தமிழகத்தில் மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை. அதேநேரம் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்று ஷாலினி பலநாள் கனவாக இருந்துள்ளார். இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள வெளிநாட்டு கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை அணுகியுள்ளார். அவர்கள், போலந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதற்காக 1 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.