நெல்லை, செப். 20: கோவிந்தபேரி மேட்டு சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா வெகுவிமரிசையாக இன்று (20ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி சீவலப்பேரியில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரி மேட்டு சுடலைமாடசுவாமி கோயிலில் புரட்டாசி கொடை விழா வெகு விமரிசையாக இன்று (20ம் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடத்தை நேற்று (19ம் ேததி) மாலை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை நடந்தது.