செங்கோட்டை, செப். 20: . தென்காசி அடுத்த மேலப்பாவூர் சாலைத்தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் முத்துக்குமார் (28). இவருக்கும், செங்கோட்டை அடுத்த இலத்தூர் சங்கர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் பார்வதி (எ) பானுவுக்கும் (24) கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. முத்துக்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் இலத்தூரில் பெற்றோருடன் பார்வதி வசித்து வந்தார்.
கடந்த வாரம் மேலப்பாவூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்ற பார்வதியை மனம் புண்படும்படி மாமியார் பண்டாரத்தி பேசியதாகவும், இதனால் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.