×

சாலை விபத்தில் ஒருவர் பலி

திண்டிவனம், செப். 20: திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் மாரி மகன் மதியழகன்(51) விவசாயி. இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்க்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த காமராஜா மகன் சதீஷ்(21) என்பவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து எதிர்பாராதவிதமாக மதியழகன் பின்னால் மோதினார்.

இந்த விபத்தில் மதியழகனுக்கு வலது கை மற்றும் இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகனம் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய சதீஷ் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மதியழகன் உடலை கைப்பற்றிய வெள்ளிமேடுபேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக  திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : road accident ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு