சின்னசேலம், செப் 20: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சிறப்பு கரும்பு அரவை பருவம் நிறைவடைந்து. கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் பருவமழை பொழிவு இல்லாததாலும், கடும் வறட்சியின் காரணமாகவும் கரும்பு வயல்கள் காய்ந்து சருகானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சிறப்பு கரும்பு அரவை பருவத்தை உடனே துவக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஆலையின் தலைவர் ராஜசேகர், மேலாண்மை இயக்குநர் சிவமலர் மற்றும் இயக்குநர்கள் ஆலோசனையின்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம்தேதி சிறப்பு கரும்பு அரவை துவங்கியது. அன்றுமுதல் நேற்று காலை வரை சுமார் ஒரு லட்சத்து இரண்டாயிரம் டன் கரும்பு அரவை செய்து சிறப்பு கரும்பு அரவையின் இலக்கை முடித்தது. விவசாயிகளின் நலன்கருதி முன்கூட்டியே சிறப்பு அரவையை துவக்கிய ஆலை நிர்வாகத்திற்கு கரும்பு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.