விழுப்புரம், செப். 20: விழுப்புரம் நகர சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி பிரச்னையில் விரைந்து தீர்வு காண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் நகரில் 300க்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்துக்கு சுமைப்பணி தொழிலையே நம்பியுள்ளனர். இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளாக எந்தவிதமான கூலி உயர்வும் வழங்கப்படவில்லை. பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், போராடியும் பலனில்லை. இந்நிலையில் வேறுவழியின்றி விழுப்புரம் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு அன்மையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.