கயத்தாறு செப்.20: கயத்தாறு அருகேபுதுக்கோட்டை தெற்குதெருவைச் சேர்ந்தவர் சந்திரன்(64). இவர் கடந்த 9ம்தேதி சந்திரன் கயத்தாறு -மதுரை மெயின் ரோட்டில் உள்ள ஒரு மரக்கடை முன்பாக தனது மொபட்டில் உட்காந்திருந்தார். அப்போது கயத்தாறு நோக்கி வேகமாக வந்த ராஜாபுதுக்குடி மலையரசன் குடியிருப்பைச் சேர்ந்த நடராஜன் மகன் செல்லத்துரை ஓட்டி வந்த பைக் சந்திரன் மேல் மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரனை கயத்தாறு போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.