விழுப்புரம், செப். 20: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 1234 கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தமிழக அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வொய்ப் அல்லது மல்ட்டி பர்ப்பஸ் ஹெல்த் வொர்க்கர் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.