நாகர்கோவில், செப்.20: நாகர்கோவில் மாநகராட்சியில் மனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் 3 நகராட்சிகளின் பணியாளர்களுக்கு 4 கட்டமாக துப்புரவு பணி மேற்கொள்ளுதல், தன்னலம் பேணுதல், திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.