தஞ்சை, செப். 20: காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்ககோரி தஞ்சை ரயில் நிலையம் முன் காவிரி படுகை கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் (மா. கம்யூ.) தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். ஜனநாயக முறையில் உரிமைக்காக போராடும் பொதுமக்கள் மீது பொய் வழக்குகளை போட கூடாது. ஆம்பலாப்பட்டு, சூரக்கோட்டை, அம்மாப்பேட்டை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தகோரி கலெக்டரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை நடத்திவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பெட்ரோலிய குழாய் பதிக்கும் பகுதிகளில் மக்களை அழைத்து பேச வேண்டும்.