×

தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும் இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்

மன்னார்குடி, செப். 19: தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என மன்னார்குடியில் நடந்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றியக்குழு கூட்டம் மன்னார் குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்றத்தின் ஒன்றிய தலைவர் பழனி வேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாப்பையன் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப் பினர் .செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி. மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன். ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மட்டுமல்லாமல் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் தலைவர்களை வீட்டு சிறைகளில் வைத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். சமீபத்தில் சென்னையில் ப்ளக்ஸ் போர்டு விழுந்து பலியான சுபக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தியதோடு தமிழகத் தில் ப்ளக்ஸ் பேனரை தடைசெய்ய வலியுறுத்தப் பட்டது. மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் இசிசிமற்றும் ரத்த பரி சோதனை நிலையத்தில் உள்ள காலிப்பணிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஒன்றிய துணைசெயலாளர் வினோத் வரவேற்றார். முடிவில் தரணி நன்றி கூறினார்.

Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்