×

குண்டும், குழியுமான அரசலடி சாலையால் மக்கள் அவதி

திருத்துறைப்பூண்டி, செப்.19: குண்டும், குழியுமான அரசலடி தெரு சாலையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு சொந்தமானஅரசலடி தெரு சாலை உள்ளது.இந்த சாலையைஅரசலடி தெருவிலுள்ள 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாலை வழியாக பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் சென்று வருகின்றனர். மேலும் இந்தபகுதியில் தேவாலயம் உள்ளது.100க்கும் மேற்பட்டநரிக்குறவர் சமூகத்தினரும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.இந்த சாலை முன்பு 30 அடி அகலமாக இருந்தது.தற்போது ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக உள்ளது. சாலையைசீரமைத்து 7 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போது சாலை மிகவும் சேதமடைந்து கப்பிகற்கள்எல்லாம் பெயர்ந்து நிற்கிறது. இந்த சாலையில் கழிவு நீர் மற்றும் மழை நீரும் சேர்ந்து நிற்கிறது.அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாதஅவலநிலைஉள்ளது.பொதுமக்கள், மாணவர்கள்என அனைவருமே மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவேமாணவர்கள் பொதுமக்கள்நலன் கருதி சாலையைசீரமைக்க வேண்டும். சாலையைசீரமைப்பதற்கு முன்பாககாணாமல் போன 20 அடி சாலையைகண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிசீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள்கலெக்டருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : road ,Rajaladi ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி