×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

விருதுநகர், செப். 19: விருதுநகர் அல்லம்பட்டி பகுதி மற்றும் சாத்தூரில் கஞ்சா வியாபாரி 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் அல்லம்பட்டி எம்ஜிஆர் காலனி அருகே அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (21). இவர் கஞ்சா விற்பதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மாரீஸ்வரனை கைது செய்தனர்.. அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.சாத்தூர்: சாத்தூர் இன்ஸ்பெக்டர் சுபாகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது சாத்தூர் அருகே ஒ.மேட்டுபட்டி இந்திரா காலணி சமுதாயக்கூடம் அருகில் வைத்து கஞ்சாவிற்ற அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் காளிமுத்து (23) என்பவரை பிடித்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 260 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி