×

உடலில் சேறு பூசி நேர்த்திக்கடன்

சாயல்குடி, செப்.19:  கமுதி அருகே செங்கப்படை கிராமத்திலுள்ள அழகுவள்ளி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், திருவிளக்கு பூஜை, கொலுமாவு பூஜை, காவு கொடுத்தல் பூஜை ஆகியவை நடந்தது. தினந்தோறும் பெண்கள் கும்பி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம், ஆடியும் உற்சாகமாக ஒரு வாரம் திருவிழாவை கொண்டாடினர். இதில் பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு, அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டும், விவசாயிகள் உடல் ஆரோக்கியம் பெறவேண்டும் என ஆண்கள், சிறுவர்கள் உடல் முழுவதும் சேற்றுகளை பூசிக்கொண்டு சேத்தாண்டி வேஷம் போட்டு ஊர்வலம் வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி