×

கறவை மாடுகள் வழங்கல்

சிவகங்கை, செப். 19: சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மானியத் திட்டத்தில் 135 பயனாளிகளுக்கு ரூ.6.75லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகள் வழங்கப்பட்டது.
சிவகங்கை அருகே கூட்டுறவுப்பட்டியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மானியத் திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் மகளிர் குழுக்களுக்கு மானியத் திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அசோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் பழனீஸ்வரி காரைக்குடி ஆவின் பொது மேலாளர் ரெங்கசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்