×

திருப்புத்தூர் அருகே அண்ணியை அடித்த கொழுந்தன் கைது

திருப்புத்தூர், செப் 19: திருப்புத்தூர் அருகே நெற்குப்பையில் அண்ணியை அடித்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர். திருப்புத்தூர் அருகே நெற்குப்பை மண்டைக்கருப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தம்பி பாஸ்கரன் (35). இவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் தனித்தனியாக குடியிருந்து வருகின்றனர். இருவருக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது மணிகண்டனின் மனைவி வள்ளிமீனாள்(35)க்கும், பாஸ்கரனுக்கும் பிரச்னை ஏற்பட்டு வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கரன் அண்ணி வள்ளி மீனாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளி மீனாள் நெற்குப்பை போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று பாஸ்கரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காயமடைந்த வள்ளிமீனாள் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

Tags : Kolunthan ,brother ,Tiruputhur ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...