காரைக்குடி, செப். 19: காரைக்குடி அருகே கோட்டையூர் வேலங்குடி ரோட்டில் உள்ள தமிழக படைப்பாளர் மக்கள் கட்சி அலுவலகத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மாநில தலைவர் வைத்தியலிங்க ஸ்தபதி, பொதுச் செயலாளர் அருணாசலம், பொருளாளர் ராஜேந்திரன், மணிவண்ணன், பெரியய்யா, மகளிரணி ஆனந்தி, சாந்தி மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மாலையில் மகர் நோன்பு திடலில் இருந்து மீனாட்சிபுரத்தில் உள்ள அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.