×

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

சிவகங்கை, செப். 19: சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்த விளக்க கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் கண்ணுச்சாமி தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கல், குடும்ப ஓய்வூதியம் ரூ.9ஆயிரம் வழங்கல், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்கல், உணவு மானியம் உயர்த்தி வழங்கல் உள்ளிட்ட 40அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை விளக்கி மாநில செயலாளர் மலர்விழி, மாநில துணைத்தலைவர் பாண்டி பேசினர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.16ல் போராட்ட ஆயத்த மாவட்ட மாநாடு, அக்.23ல் ஒன்றிய அளவில் பிரசாரம், அக்.26ல் மாவட்ட அளவில் மறியல், நவ.10ல் மாவட்ட பேரணி, டிச.23முதல் மாநில அளவிலான போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சுரேஷ் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீமைச்சாமி, மாவட்ட நிர்வாகிகள் பானுமதி, பாண்டி, பூந்தேவி, முத்துக்குமார், மலர்க்கொடி, கருப்பையா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nutrition Staff Strike ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை