×

முதுகுளத்தூரில் பொங்கல் திருவிழா

சாயல்குடி, செப்.19:  முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. முதுகுளத்தூர் விஸ்வகர்மா உறவின்முறை சார்பில் அரசு மருத்துவமனை அருகே விஸ்வகர்மா கோயிலில், வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. திருவிழாவையொட்டி தினந்தோறும் பெண்கள் கும்மி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம், ஆடியும் உற்சாகமாக கொண்டாடினர். இதில் பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு, பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மழை பெய்ய வேண்டி திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இரவில் கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது.

Tags : festival ,Mudukulathur ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!