×

திருநகர் சாலையில் டூவீலர்களை கவிழ்க்கும் பள்ளம்

திருப்பரங்குன்றம், செப்.19: திருநகர் சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். திருநகரில் மூன்றாவது பஸ் ஸ்டாப் அருகில் உள்ளது வெங்கடேஸ்வரா மெயின்தெரு சாலை. இது திருநகர், ஜோசப் நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளை மதுரை-திருமங்கலம் சாலையுடன் இணைக்கும் முக்கிய சாலையாகும். இப்பகுதி மக்கள் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். சாலையில் தற்போது கற்கள் பெயர்ந்து சுமார் பத்து அடி  அகலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் டூவீலரில் செல்வோர் வாகனத்துடன் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். பள்ளிக்கு சைக்கிளில் சென்று வரும் மாணவிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து மாநகராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Thirunagar ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி