திருமங்கலத்தில் வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபருக்கு தர்மஅடி

திருமங்கலம், செப்.19:  திருமங்கலத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.திருமங்கலம் புதுநகர் பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் பேண்ட் மட்டும் அணிந்த வடமாநில வாலிபர் நைசாக ஒரு வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றார். இதை பார்த்த வீட்டிலிருந்த பெண்கள் ‘திருடன்...திருடன்’ என கூச்சலிட்டனர். இதை கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர் வாலிபரை பிடிக்க முயன்றனர். பொதுமக்களை கண்டவுடன் அவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் கைகளை கட்டி தர்மஅடி கொடுத்தனர். அந்த நபருக்கு தமிழ் தெரியவில்லை. இந்தி மட்டும் பேசினார். இதனால் ஒன்றும் புரியாத பொதுமக்கள் பொதுமக்கள் டவுன் போலீஸ் ஸ்டேசனில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த புதுநகர் பகுதியில் அடிக்கடி நகைபறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.

Related Stories: