விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.23 முதல் இலவச பயிற்சி

திண்டுக்கல், செப். 19: டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதால் திண்டுக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.23 முதல் இலவச பயிற்சி துவங்கவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரிய தேர்வுகள், தமிழ்நாடு சீருடைப பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிலும் வட்டத்தில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவையான பொதுஅறிவு புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், மாத இதழ்கள், சஞ்சிகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணைப்படி விரைவில் வெளியாகவுள்ள தொகுதி-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் செப்.23 (திங்கள்) முதல் தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்பில் முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும் பல மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சில் சேர விரும்புபவர்கள், தொகுதி-2 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான சான்றுடன் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: