பெரியார் பிறந்தநாள் விழா

பழநி, செப். 19: பழநியில் நகர தமாகா சார்பில் பெரியாரின் 141வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகரத் தலைவர் சுந்தர் தலைமை வகித்தார். ரயில்வே பீடர் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து

மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமாகா நிர்வாகிகள் சுப்பிரமணியன், சண்முநாதன், சுந்தர்ராஜ், திருஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆதித்தமிழர் கட்சி சார்பில் நடந்த விழாவிற்கு பழனி சிவா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழநி ராஜா, சட்டமன்ற தொகுதி செயலாளர் மணி, நகர அமைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Stories: