கொடைக்கானலில் மது விற்ற 5 பேர் கைது

கொடைக்கானல், செப். 19: கொடைக்கானலில் மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானல் மலைப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனை குறித்து பொதுமக்கள் அடிக்கடி போலீசாரிடம் புகார் செய்து வருகின்றனர். அதன்பேரில் கொடைக்கானல் போலீசார் தீவிர தொடர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெருமாள்மலையை அடுத்த அடுக்கம் பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது அடுக்கம் பாலமலையை சேர்ந்த செல்வன் (36), தேனியை சேர்ந்த பாலமுருகன் (28) மது விற்றது தெரிந்தது. இதேபோல் கொடைக்கானல் போஸ் ஆபீஸ் ரோடு பகுதியில் ஆத்தூரை சேர்ந்த மகாராஜன் (50), அண்ணாநகரில் நாயுடுபுரத்தை சேர்ந்த கணேசன் (40), உட்வில் சாலை பகுதியில் பழநி பெரியகலையம்புத்தூரை சேர்ந்த திருக்குமரன் (43) ஆகியோர் மது விற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிந்தனர்.

Related Stories: