துப்பாக்கியால் மிரட்டிய எஸ்ஐ இடமாற்றம்

திண்டுக்கல், செப். 19: நத்தம் சப்இன்ஸ்பெக்டர் மாதவராஜ்  தலைமையிலான போலீசார் சில நாட்களுக்கு முன்பு செந்துறையில் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது எஸ்ஐ நிறுத்தப்பட்ட வாகனங்களின் மீதும் வழக்குப்பதிவு  செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட செந்துறையை சேர்ந்த செல்வக்குமரன்  என்பவரை நள்ளிரவில் வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியும்,  தாக்கியும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை கண்டித்தும், எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரியும் செந்துறையில்  கடைகளை அடைத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் எஸ்ஐ  மாதவராஜை திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி  சக்திவேல் உத்தரவிட்டார்.

Related Stories: