×

திருமணம் செய்வதாக கூறி பள்ளி மாணவி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

காங்கயம், செப் .19  :   காங்கயம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த சிவா(24) என்ற வாலிபர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.  இதில் மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். மாணவியின் பெற்றோர்   காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  சிவாவை கைது செய்தனர். பின் சிவா திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு