×

நீதிமன்றத்தில் ஆஜராகாத

நகராட்சி ஆணையர், மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு பிடிவாரண்ட்தாராபுரம், செப். 19:  தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சிவில் வழக்கில் ஆஜராகாத நகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாடார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ராஜே்ஸ்வரி(45). இவரது தங்கை ஜெயலட்சுமி(35) அதேபகுதியில் தனது கணவர் ராமசாமியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராஜேஸ்வரி மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் அதேபகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பேக்கரி நடத்தி வந்துள்ளனர்.  இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட காரணமாக ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்ட இடத்திற்கு சொந்தம் கொண்டாடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின் இதுதொடர்பாக ராஜேஸ்வரி மற்றும் ஜெயலட்சுமி ஆகிய இருவரும் கடந்த 2013ம் ஆண்டு நீதிமன்றனத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 வழக்கை விசாரித்த நீதிபதி லீலாவதி, இந்த வழக்கு சம்பந்தமாக தாராபுரம்  நகராட்சி ஆணையாளர் மற்றும் மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். ஆனால் ஆணையை பெற்றுக்கொண்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சார்பு நீதிமன்ற நீதிபதி லீலாவதி இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று உத்தரவிட்டார்.

Tags : court ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...