×

மாவோயிஸ்ட்டுகள் கோர்ட்டில் ஆஜர்

கோவை, செப்.19:  கோவை மாவட்ட கோர்ட்டில் மாவோஸ்ட்டுகள் ரூபேஷ், அவரது மனைவி சைனா, கண்ணன், அனூப், ஈஸ்வரன் ஆகியோர் நேற்று ஆஜராகினர். கருமத்தம்பட்டியில் இவர்கள் 3 ஆண்டிற்கு முன் போலீசில் பிடிபட்டனர். சதி செயல்களில் இவர்கள் ஈடுபட திட்டமிட்டு கோவை வந்ததாக தெரிகிறது. இதில் கைதானவர்கள் ேகாவை மற்றும் வெளி மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.  வழக்கு விசாரணைக்காக ரூபேஷ் உட்பட 5 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது இவர்கள், கோர்ட் வளாகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது சரியல்ல, இந்தியை திணிக்காதே என கோஷமிட்டனர். வழக்கு விசாரணைக்கு பின்னர், சைனா தவிர மற்றவர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.


Tags : Maoists ,court ,
× RELATED வயநாடு தொகுதி மக்களை...