மாஜி கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னிமலை, செப்.19:  சென்னிமலை அருகே மாஜி கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னிமலை அருகே 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி (60). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர், கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இவரை பணத்திற்காக கொலை செய்தது தெரியவந்தது.  இதில், சென்னிமலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுச்சாமி மற்றும் அவரது நண்பர்கள் பாலாஜி, பூபதி, மகேந்திரன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மதுரையை சேர்ந்த முத்துக்குமார்(29) என்பவரை தேடி வந்தனர்.    இந்நிலையில் முத்துக்குமார் கடந்த 9ம் தேதி மதுரையில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சென்னிமலைக்கு அழைத்து வந்தனர். முத்துக்குமார் திருப்பூர் அடுத்த முருகம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார். இவர் மகேந்திரனின் நண்பர். முத்துக்குமாரும் இந்த கொலையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: