×

அபாய நிலையில் மின்கம்பம் பொதுமக்கள் அதிர்ச்சி

ஈரோடு, செப். 19:  ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோடும், ஜின்னா வீதியும் சேரும் இடத்தில் உள்ள மின்கம்பம் மோசமான நிலையில் சாய்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட் பகுதியில் காவிரிரோடு, ஜின்னா வீதி சந்திக்கும் ரோட்டோரத்தில் உள்ள மின்கம்பம் சாய்ந்துள்ளது.
 இந்த மின்கம்பத்தில் இருந்து ஏராளமான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனநிலையில் மின்கம்பத்தில் கீழ் பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு