மாணவர்கள் ஆராய்ச்சிக்காக கார் ரெனால்ட் நிஸ்ஸான் வழங்கியது

கோவை, செப்.19:  கோவை ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக, சென்னையை சேர்ந்த ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனம் டஸ்டர் ரக கார் மற்றும் கியர் பாக்ஸை நன்கொடையாக வழங்கியது.

 நேற்று முன்தினம் ரெனால்ட் நிஸ்ஸான் தொழிற்சாலை வளாகத்தில் நடந்த விழாவில் ரெனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பிஜு பாலேந்திரன், கார் மற்றும் கியர் பாக்ஸை ஸ்ரீஈஸ்வர் கல்லூரியின் தொழில்துறை உறவு இயக்குனர் கண்ணன் நரசிம்மன் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் சுரேஷ்குமார் ஆகியோரிடம் வழங்கினார். மாணவர்களின் ஆராய்ச்சிக்காக கார் வழங்கிய ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்திற்கு ஸ்ரீஈஸ்வர் கல்லூரி முதல்வர் சுதா மோகன்ராம் நன்றி தெரிவித்தார்.

Related Stories: