வன உயிரின வார விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் 22ல் நடக்கிறது

திருச்சி, செப்.19: வனஉயிரின வாரவிழாவை முன்னிட்டு திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதால் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி வனத்துறையின் சார்பாக செப்டம்பர் மாதம் வன உயிரின வார விழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், வினாடி வினா, மற்றும் பேச்சுப்போட்டி, ஆகிய போட்டிகள் பிஷப் ஹீபர் கல்லூரியில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்துக் கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். ஓவியப்போட்டி பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, பேச்சுப்போட்டி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. தண்ணீருக்குள் வாழ்க்கை என்ற தலைப்பில் எல்கேஜி முதல் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன உயிரினம் எனும் தலைப்பில் வினாடி-வினா போட்டி 9ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர் இடையேயும், மனித வன உயிரின மோதல் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி 9ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர், மாற்றுத்திறனாளிகளுக்கும் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2414265, 7904400695, 9994656892 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: