தகராறை விலக்கிவிட்ட சிறப்பு எஸ்ஐயை மிரட்டிய 2 பேர் கைது

திருச்சி, செப்.19: திருச்சியில் குடிபோதையில் தகராறு செய்ததை விலக்கி விட்ட எஸ்எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்த 2 போரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.திருச்சி கோட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ சக்திவேல் மற்றும் போலீசார் ரோந்து (பேட்ரோல்) வாகனத்தில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அவர்கள் சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் வந்த போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே 2 பேர் போதையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மோதிக்கொள்வதுபோல் தகராறு ெபரிதானதால் ரோந்து சென்ற போலீசார் அங்கிருந்து செல்லும்படி விரட்டினர். ஆனால் போலீசாரை மதிக்காத இருவரும் எஸ்எஸ்ஐ சக்திவேலை மிரட்டினர். இதுகுறித்து எஸ்எஸ்ஐ அளித்த புகாரின்பேரில் கோட்டை சப்இன்ஸ்பெக்டர் தயாளன் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிந்து சிந்தாமணியை சேர்ந்த வில்லியம்ஸ் ஸ்டோன் கோல்டு (21), வெனீஸ் தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ(41) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: