தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு விமான நிலைய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

ஏர்போர்ட், செப்.19: மத்திய அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமான நிலைய இயக்குனர் அலுவலகம் முன் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் மத்திய அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, துப்பாக்கி தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பல நாட்களாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து திருச்சி விமான நிலையத்திலும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று மதியம் விமான நிலைய இயக்குனர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: