×

ஜங்சனில் இறந்து கிடந்தவர் யார்?

சேலம், செப்.19: சேலம் ஜங்சன் ரயில் நிலைய பஸ் ஸ்டாப்பில், கடந்த மாதம் 28ம் தேதியன்று, 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், சூரமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல் அறிந்தவர்கள் சூரமங்கலம் போலீசாரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்