×

புதன்சந்தையில் 92 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனை

இடைப்பாடி, செப்.19: இடைப்பாடி புதன் சந்தையில், 92 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனையானது.சேலம் மாவட்டம் இடைப்பாடியில் வாரந்தோறும் புதன்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 92 டன் காய்கறிகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியதால் ஆடுகள் கொண்டு வரப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட சேவல், கோழி என விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

மேலும் காய்கறிகள் தான் அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் ஒரு கிலோ கேரட் ₹40க்கும், பீட்ரூட் ₹30க்கும், பீன்ஸ் ₹35க்கும், முள்ளங்கி ₹20க்கும், முட்டை கேஸ் ₹15க்கும், தக்காளி ₹15க்கும், பெரிய வெங்காயம் ₹35 முதல் 45 வரை என 92 டன் காய்கறிகள் விற்பனையானது. இதில் நேற்று புரட்டாசி மாத முதல் நாள் என்பதால், வழக்கத்தை விட அதிக அளவில் காய்கறிகள் விற்பனையானது. இதில் ₹30 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா