×

வேப்பிலைபட்டியில் ஆபத்தான மின்கம்பம்

கடத்தூர், செப். 19: கடத்தூர் அருகே வேப்பிலை பட்டியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே, கடந்த10 ஆண்டு முன் நடப்பட்ட பழமையான மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்கம்பத்தை மாற்ற அதிகாரிக்கு பலமுறை தகவல் கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.  பருவமழை பரவலாக பெய்து வருவதால் மின்கம்பம் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. பள்ளி மாணவர்கள் கம்பத்தின் அருகில் விளையாடி வருகி–்றனர்.  எனவே அசம்பாவிதம் நிகழும் முன்பு பழுதடைந்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா