×

குமாரசாமிபேட்டையில் திமுக எம்பி திடீர் ஆய்வு

தர்மபுரி, செப்.19: தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், குமாரசாமிபேட்டை பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் நேற்று குமாரசாமிபேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், அப்பகுதி மக்கள் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் ஓடுவதால் சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி, நெடுஞ்சாலைதுறை, குடிநீர் வடிகால்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்த எம்பி செந்தில்குமார், பொதுமக்கள் புகார் குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட குழாய், கழிவுநீர் கால்வாய் வழியாக செல்வதால், கழிவுநீர் செல்வது தடைப்பட்டது தெரியவந்தது. இந்த சாலையில் ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்து குடிநீர் குழாய் செல்ல தனி வழியை ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி எம்பி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மாவட்ட மைய நூலகத்திற்கு எம்பி செந்தில்குமார், அங்கு மோசமான நிலையில் இருந்த கழிப்பறையை தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி