×

ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

புளியங்குடி, செப். 19: புளியங்குடி போலீசார், நேற்று டி.என்.புதுக்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மினிடெம்போவை மடக்கி சோதனையிட்டனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. விசாரணையில் டெம்போவில் இருந்தவர்கள் டிஎன்.புதுக்குடி கற்பக வீதி தெருவைச் சேர்ந்த காசிராஜன், தாமரைச்செல்வன், சுரேஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் என்றும் தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், ரேஷன் அரிசியுடன் டெம்போவை பறிமுதல் செய்து மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது