கடையம், செப். 19: கடையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் பேச்சிமுத்து மற்றும் கோமதிநாயகம் ஆகியோர் ஒரு வழக்கு விசாரணைக்காக கடையம்- பாவூர்சத்திரம் ரோட்டில் உள்ள அங்கப்புரத்தில் உள்ள ஓய்வுபெற்ற எஸ்எஸ்ஐ மரியசந்திரசேகர் வீட்டின் முன் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த மரியசந்திரசேகர், அவரது மகன் சகாயராஜ் ஆகியோர் போலீசாரிடம் ஏன் சும்மா இங்கு வந்து நிற்கிறீர்கள். எத்தனை முறைதான் விசாரணைக்கு வருவீர்கள் என்று கூறி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாகப் பேசியுள்ளனர். மேலும் இனிமேல் இங்கு வந்தால் வெட்டிக் கொன்று விடுவோம் என்று போலீசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேச்சிமுத்து கொடுத்தப் புகாரின் பேரில் மரியசந்திரசேகர், சகாயராஜ் ஆகியோர் மீது எஸ்ஐ தமிழரசன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி இதுபற்றி விசாரித்து சகாயராஜை கைது செய்தார். தலைமறைவான மரியசந்திரசேகரை தேடி வருகிறார்.