×

நிலக்கடலை விலை கிலோவிற்கு ரூ.6 உயர்வு

க.பரமத்தி, செப்.19: நிலக்கடலை விலை ஒரு கிலோவிற்கு ரூ.6 உயர்ந்துள்ளதால் நிலக்கடலை விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கரூர், க.பரமத்தி ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய கிராம புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 74 மூட்டைகளில் 2483 எடைக்காக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு அதிக பட்சமாக ரூ.71க்கும், குறைந்த பட்சமாக ரூ.65க்கும், ஏலம் போனது. கடந்த முறை நடந்த ஏலத்தோடு ஒப்பிடுகையில் ரூ.6 உயர்ந்துள்ளதால் நிலக்கடலை விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது