×

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

பொன்னமராவதி, செப். 19: பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.பொன்னமராவதி காமராஜ் நகர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராஜாசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். நாமக்கல் சுகந்தி ரவிச்சந்திரன், குழிபிறை பெலிஸ்டா இருவரும் இணைந்து திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஊன்றுகோல் வழங்கினர். மேலைச்சிவபுரி கல்லூரி மாணவிகள் நந்தினி, தனலெட்சுமி, இந்து ஆகியோர் இணைந்து சில்வர் பாத்திரம், கரண்டி, பாய் ,பென்சில், பேனா போன்ற தளவாட பொருட்களை வழங்கினர்.இதில் பாண்டியன், சரவணன், அருண்குமார், அப்துல் கலாம் எழுச்சி மன்ற செயல் ஆலோசகர் மெஸபன் கலைமாமணி பாஸ்கர் இந்தியன், மாற்றுத்திறன் பள்ளி ஆசிரியை பொன்னம்மாள், உதவியாளர் அம்சவள்ளி பங்கேற்னர். முன்னதாக சுகந்தி வரவேற்றார். ஆசிரியை பொன்னம்மாள் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...