×

அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல்

பொன்னமராவதி, செப். 19: பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பொன்னமராவதி அருகே காரையூர் சப்இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சேரனூர் வெள்ளாற்றின் அருகில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி சென்றது தெரிந்தது. இதேபோல் நெறிஞ்சிக்குடி விளக்கில் அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆட்டோ மொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்தத்தின் காரணமாக விற்பனை குறைந்துவிட்டது. வட்டிவிகிதம் அதிகரிப்பு, கடன் பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகளால் கார் வாங்குவோர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் சிறு நகரங்களில் தொடங்கிய கணிப்பொறியுடன் கூடிய வீல் அலைமென்ட் செய்யும் கடைகளுக்கு வாகனங்கள் வருவது கடந்த சில வாரங்களாக வெகுவாக குறைந்துவிட்டது.



Tags :
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...