பட்டுக்கோட்டை, செப். 19: பட்டுக்கோட்டையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமை வகித்து உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஒரத்தநாடு காந்தி, பட்டுக்கோட்டை கிழக்கு பார்த்திபன், மேற்கு ராமநாதன், மதுக்கூர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.