திருக்காட்டுப்பள்ளி, செப்.19: தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் பூதலூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் செப்டம்பர் 2019 ஊட்டசத்து மாதம் “போஷன் அபியான்” என்ற பெயரில் கோலப்போட்டி நடந்தது.
பூதலூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜெயப்பிரபா தலைமை வகித்தார். போட்டியை பூதலூர் ஒன்றிய ஆணையர் காந்தரூபன் துவக்கி வைத்தார். போட்டியில் பூதலூர் ஒன்றிய அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் பங்கேற்றனர்.