கும்பகோணம், செப். 19: கும்பகோணத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் 1,017 குவிண்டால் பருத்தி விற்பனையானது. கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடந்தது. வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலை வகித்தார். முத்தூர், அகராத்தூர், வேப்பத்தூர், திருவிடைமருதூர், கடலங்குடி, கடம்பங்குடி, கருமாத்தூர், அசூர், ஆதனூர் மற்றும் ஊமையாள்புரத்தை சேர்ந்த 1000 விவசாயிகள், 1017 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.