×

சீர்காழி பத்திரப்பதிவு அலுவலக சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்3

சீர்காழி, செப்.19: சீர்காழி பத்திர பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் சேற்றில் இறங்கி நடந்து செல்லவேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கிநிற்கும் தண்ணீரில் வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் மீது சேற்றை வாரி இறைத்து செல்கிறது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஊழியர்கள் நலன் கருதி சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Sirkazhi Recording Office Road ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...